Wednesday, March 31, 2010

அய்யனார் சாமி - வார்டனா ?

கடந்த இரு நாட்களாக கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். 28 ஆம் நாள் ஞாயிற்று கிழமை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றோம். அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைந்தோம். பின் அங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்தோம். பங்குனி உத்திரம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருசெந்தூர் வரை கால் கடுக்க நின்றே பயணிக்க வேண்டி இருந்தது. பின் அங்கிருந்து எங்கள் குல தெய்வம் செல்லபிள்ளை அய்யனார் கோவில் அமைந்துள்ள பரமன்குறிச்சி சென்றோம். இறை தரிசனம் பெற்று அங்கே வாழை மரம் நிழலில் தூங்கி எழுந்தேன். இறை வேண்டுதலுக்காக மொட்டை போட்டுக்கொண்டேன். நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு இறைவனை குடும்பத்துடன் வேண்டி கொண்டேன். அடுத்த நாள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகப்பெருமானை தரிசித்து வந்தோம். இரவு முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக அங்கிருந்து தூத்துக்குடி வந்தடைந்தோம். எனக்கான இருக்கை என் s9-38. என் முன்னாடி ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். நானாக சென்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் பெயர் சின்னத்தம்பி. துணி தைத்து கொண்டு சென்னை மைலாப்பூரில் ஒரு கடை வைத்திருப்பதாக சொன்னார். எங்கே பொய் வருகிறார் என்று கேட்டதற்கு குல தெய்வம் கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன் என்றார். நான் அவரிடம் உங்கள் குல தெய்வம் என்ன என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் சற்று விநோதமாக இருந்தது. ஆம். அவர் குல தெய்வம் அய்யனார் என்று சொன்னார். கையில் அரிவாளுடன் காணப்படும் அய்யனார் என்றார் ..... நான் சரி என்று சொல்லும் முன்பே அவர் சொன்னார் அய்யனார் ஒரு வார்டன் சார் என்றார். வார்டன் என்றால் கல்லூரி விடுதியில் இருப்பவரை ஒப்பிட்டு சொல்கிறீர்களா என்றேன். அவர் சொன்ன பதில் ஆம் அய்யனார் உலகையே காக்கும் வார்டன் என்றார். சரி அதற்க்கு மேல் விளக்கம் கேட்டால் நான் நாத்திகன் என்ற முத்திரை குத்தப்படும் என்று நினைத்து என் கேள்விகளை எனக்குள்ளே வைத்து கொண்டேன். சரி அவர் சென்னையில் வசிக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு என்று கேட்டேன். அவரோ சென்னையில் சொந்த வீட்டில் வசிப்பதாக சொன்னார். சற்று ஆர்வ மிகுதியுடன். அவரிடம் எத்தனை வருடங்களுக்கு முன்னாள் எத்தனை லட்சங்களுக்கு வீடு வாங்கினீர்கள் என்றேன். அவர் சொன்னார் வருடம் 350 ரூபாய் மட்டும் தான் என்றார். எனக்கு ஒரு சந்தேகம் எழ ஆரம்பித்தது. ஒரு வேலை அந்த நபர் போதையில் இருக்கிறாரா என்று எனக்கு தோன்றியது. ஆனால் அப்படி தெரியவில்லை. பின் அவரே சொன்னார் அவருக்கு குடிசை மாற்று வாரியத்தால் அந்த வீடு இலவசமாக குடுக்க பட்டதாம். வருடம் ஒரு முறை மண் வரி என்றே பெயரில் 350 ரூபாய் கட்டினால் போதுமாம். எனக்கு தூக்கம் வந்ததால் அவரிடம் கை குலுக்கி விடை பெற்றுகொண்டேன். எனக்குள் இரண்டு கேள்விகள் மட்டும் நிலைத்து கொண்டது.... அய்யனார் வார்டனா ? இன்னொன்று இலவச வீடு சென்னையிலா ... ஒரு வேலை அவருக்கு அரசாங்கம் குடுத்த ஹமாம் கிரக பிரவேஷம் பரிசு திட்டத்தின் வெற்றியாளாரோ ? என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டேன். காலை கண் விழித்து பார்த்ததும் தாம்பரம் வந்தடைந்ததும் ரயில் பயணம் இனிதே முடிவடைந்தது. கடந்த இரு நாட்கள் நன்றாக இருந்தது.

No comments: