என் பேருந்து பயணம் எனக்கு பல மனிதர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சிலர் சமுதாய அக்கறை இல்லாதவர்களையும் அடையாளம் காட்டி உள்ளது. நான் தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். பொதுவாக ஒருவர் மற்றவரை நன்றாக மதிப்பார்கள். ஆனால் சென்னையில் ஒருவன் மற்றவரை மதித்து பேசினால், அவர் தென் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருப்பார் என்று எனக்குள் சிந்திக்க தோன்றுது. இங்கே பேருந்தின் நடத்துனர் (conductor) பயணிகளிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சிலர் நடந்துள்ளதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு நாள் தியாகராய நகர் செல்ல 5A பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டு பயணம் செய்தேன். பேருந்து சைதாபேட்டை அடுத்து சென்ற பொழுது என் அருகில் அமர்ந்து இருந்தவர் சற்றும் எதிர் பாராமல் கீழே விழுந்தார். நான் அவரை தூக்க முயற்சித்தேன். உதவிக்கு கூட யாரும் கை கொடுக்காமல் எல்லாம் அவர் அவர்கள் வேளைகளில் கவனமாக இருந்தார்கள். பேருந்தும் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. பேருந்து நடத்துனரிடம் இருந்து வந்த பதில் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இருந்து வந்த வார்த்தை 'வயசான காலத்துல வீட்டுல இருக்க வேண்டியது தான. எதற்கு இங்க வந்து என் உயிரை வாங்குற. கொஞ்சன் தள்ளி படு. போ'. சிறிது நேரம் கழித்து இன்னொரு உதவி கரம் கிடைக்க அவரை கை தாங்களாக தூக்கி அவரை அமர வைத்தோம். அவரது முகத்தில் தண்ணீர் தெளிர்க்க, இயல்பு நிலைக்கு வந்தார். முதலுதவி கொடுப்பதற்கு நாங்கள் மருத்துவர் அல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர்கள். அவரிடம் பேசிய பின்பு தான் தெரிந்தது அவர் உடல் நலம் சரி இல்லாதவர். அவரிடம் சில்லறை இல்லாததினால் பேருந்து நடத்துனர், அவரிடம் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். அந்த மன அழுத்தத்தில் அவருக்கு மயக்கம் வந்து உள்ளது. மனிதர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்.
நேற்று M21 பேருந்தில் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வழியில் பயணம் செய்தேன். நான் இறங்க வேண்டிய இடம் அந்த பேருந்து நிற்காது என்றார் நடத்துனர். சரி என்று மேடவாக்கம் செல்ல பயணச்சீட்டு வாங்கினேன். நான் ஏறியது சொகுசு பேருந்து. ஆனால் எனது பயணமோ படிக்கட்டை தாண்ட முடியவில்லை. சற்று நேரம் கழித்து நடத்துனர் ஒரு பயணிக்கு புளிய மரம் பேருந்து நிறுத்தத்திற்கு பயண சீட்டு கொடுத்தார். சொகுசு பேருந்து புளிய மரம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என்று எனக்கு தெரியும். சரி இறங்கும் பொது நடத்துனரிடம் இதை கேட்ப்போம் என்று நினைத்தேன். புளிய மரம் பேருந்து நிறுத்தம் வந்தது. அப்பொழுது நடத்துனரே கீழே இறங்கி அந்த பயணியை இறக்கி விட்டார். அந்த பயணி ஒரு கால் இல்லாத ஊனமுற்றவர். நடத்துனரின் மனிதாபிமானத்திற்கு தலை வணங்குகிறேன். மனிதர்கள் உண்மையில் பலவிதம்..................