Thursday, September 24, 2009

லோக்ரஞ்சனுடன் நேற்று சிறிது நேரம்...

Sep 24, 2009: அமெரிக்காவில் இருந்து அக்கா என்னிடம் தொலைபேசியில் பேசினாள். சுமார் ஒரு மாதமாவது இருக்கும் அக்கா, தம்பி மற்றும் அத்தானை பார்த்து. அன்று அத்தான் லேப்டாப் ஐ வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு சென்றிருந்ததாக அக்கா கூறினாள். எனக்கு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அக்கா onlineல இருப்பதாக சொன்ன மறு கணமே skype ல login ஆக முயற்சி செய்தால் என் அலுவலகத்தில் அதை உபயோகப்படுத்த தடை செய்திருந்தார்கள். சரி என்று ஜிமெயில் வீடியோ chat முயற்சி செய்தால் அங்கே server error அடிக்க எனக்கு மட்டும் என் எப்படி நடக்கிறது என்று எனக்கும் என் அக்கா மனதுக்குள் கட்டாயம் இந்த கேள்வி எழுந்திருக்க கூடும். முயற்சி திருவினையாக்கும் என்று மீண்டும் முயற்சி செய்த உடன் என் கண் முன்னே என் அக்கா மற்றும் லோக்ரஞ்சன் webcam மூலம் தெரிந்தார்கள். என்னிடம் webcam இல்லாததால் என் புகைப்படம் மட்டும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். என் புகைப்படத்தை பார்த்த உடன் 'அம்மா ...மாமா..மாமா' என்று என்னை என் அக்காவிடம் அடையாளம் மாறிய அந்த மழலை மொழி கேட்க இனிமையாக இருந்தது........என்னை laptop உடன் ஒட்டி அணைக்க நினைத்த லோக்ரஞ்சனை பார்க்க மனம் ரொம்ப சந்தோசம் அடைந்தேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்பு......அம்மா, அப்பா, பாப்பா அனைவரும் அக்கா மற்றும் குழந்தையிடம் சுமார் இறந்து மணி நேரம் பேசி கொண்டே இருந்தோம். இடையில் எனக்கு பசி தெரியவே இல்லை. நான் இரவு வேலை சாப்பிட்டது நள்ளிரவு 12:15 மணி இருக்கும்......காற்றில் பறக்கும் காகிதம் போல மனம் லேசாக இருந்தது.

Friday, September 18, 2009

தனிமையில் நான்.....

கடந்த சில நாட்களாகவே எனக்குள் தனிமையை உணர்கிறேன். நான் பொதுவாக தனிமையை விரும்பும் மன நிலை கொண்டவன். ஆனால் இன்று அந்த தனிமை ஏனோ என்னை வதைக்கிறது. இதற்க்கு காரணம் லோக்ரஞ்சன்(என் அக்காவின் மகன் - 1.5 வயது எங்கள் வீட்டு செல்ல பிள்ளை). இன்று அவர்கள் எல்லாரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பொதுவாக நான் வீடு திரும்பும் நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும். மென்பொருள் துறையில் வேலை செய்பவரின் எழுதப்படாத தலைவிதி. அந்த சமயத்திலும் அவனது ஒரு சின்ன புன்னகை போதும், மரண படுக்கையில் இருப்பவன் கூட மீண்டு எழ தோன்றும். அவனது மழலை உளறல் போதும் ஆயிரம் கவிதைக்கு ஒப்பிடலாம். இன்றும் என்னை சுற்றி என் உடன் பிறந்தோர் மற்றும் என் பெற்றோர் இருக்க.....அந்த வெற்றிடம் மட்டும் நிலையாக இருக்கிறது. அவன் என்னை மாமா என்று எப்பொழுது அழைப்பனோ என்று ஏங்கிய நாட்கள் எத்தனை ? அவனது சின்னஞ்சிறு சேட்டைகள் கூட எனக்கு அழகாய் தான் தோன்றியது. இன்றும் என் அக்கா மற்றும் அத்தானிடம் தொலைபேசியில் பேசும் நடுவே அவனது குரல் கேட்கும் பொழுது மனதினுள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும் மாதிரி ஒரு எண்ணம். நான் காலை பொழுதை அவனது 'லேப்பாப்' (laptop) எனும் மழலை சொல்லை உச்சரிப்பை அழகாய் ரசிப்பேன். நாட்கள் நகர்வதே தெரியாது அவன் என் அருகில் இருக்கையில். லோக்ரஞ்சன் அமெரிக்கா செல்லும் முன்பு 'தம்பி எங்கே போறீங்கனு கேட்டால் ?' அமெரிக்கா என்று சொல்லும் அழகை யார் கேட்டாலும் பரவசம் அடைவர் என்பது உண்மை. 'சரி மாமாவை அமெரிக்கா போன நினைப்பியானு கேட்டால் ?'...நினைப்பேன் என்று அந்த மழலை மொழியில் சொல்லிய சொல்லை என்றும் நான் நினைத்து கொண்டிருப்பேன்........அவர்களின் வருகையை என்றும் எதிர்நோக்கி தனிமையில் நான்.......வாழ்க்கை என்னும் எனது பயணம் தொடர்கிறது.....