Thursday, September 24, 2009

லோக்ரஞ்சனுடன் நேற்று சிறிது நேரம்...

Sep 24, 2009: அமெரிக்காவில் இருந்து அக்கா என்னிடம் தொலைபேசியில் பேசினாள். சுமார் ஒரு மாதமாவது இருக்கும் அக்கா, தம்பி மற்றும் அத்தானை பார்த்து. அன்று அத்தான் லேப்டாப் ஐ வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு சென்றிருந்ததாக அக்கா கூறினாள். எனக்கு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அக்கா onlineல இருப்பதாக சொன்ன மறு கணமே skype ல login ஆக முயற்சி செய்தால் என் அலுவலகத்தில் அதை உபயோகப்படுத்த தடை செய்திருந்தார்கள். சரி என்று ஜிமெயில் வீடியோ chat முயற்சி செய்தால் அங்கே server error அடிக்க எனக்கு மட்டும் என் எப்படி நடக்கிறது என்று எனக்கும் என் அக்கா மனதுக்குள் கட்டாயம் இந்த கேள்வி எழுந்திருக்க கூடும். முயற்சி திருவினையாக்கும் என்று மீண்டும் முயற்சி செய்த உடன் என் கண் முன்னே என் அக்கா மற்றும் லோக்ரஞ்சன் webcam மூலம் தெரிந்தார்கள். என்னிடம் webcam இல்லாததால் என் புகைப்படம் மட்டும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். என் புகைப்படத்தை பார்த்த உடன் 'அம்மா ...மாமா..மாமா' என்று என்னை என் அக்காவிடம் அடையாளம் மாறிய அந்த மழலை மொழி கேட்க இனிமையாக இருந்தது........என்னை laptop உடன் ஒட்டி அணைக்க நினைத்த லோக்ரஞ்சனை பார்க்க மனம் ரொம்ப சந்தோசம் அடைந்தேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்பு......அம்மா, அப்பா, பாப்பா அனைவரும் அக்கா மற்றும் குழந்தையிடம் சுமார் இறந்து மணி நேரம் பேசி கொண்டே இருந்தோம். இடையில் எனக்கு பசி தெரியவே இல்லை. நான் இரவு வேலை சாப்பிட்டது நள்ளிரவு 12:15 மணி இருக்கும்......காற்றில் பறக்கும் காகிதம் போல மனம் லேசாக இருந்தது.

No comments: