நான் மற்றும் எனது நண்பர்கள் சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்வதற்க்காக சென்னை வந்தோம். மாலை ஆறு மணிக்கு விருதுநகரில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். சென்னை வந்து சேர அடுத்த நாள் மதிய வேளை நெருங்கி விட்டது. ஏற்கனவே தங்குவதற்கு ஒரு அறை இருக்கிறது என்று மிதப்பில் வந்து இறங்கினோம். சற்று அதிர்ச்சியான தகவல் நாங்கள் தங்கவிருந்த அறை வேறு யாருக்கோ கொடுத்தாகி விட்டது என்று கேட்டவுடன். சரி வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கும் தருணத்தில் லக்ஷ்மணனை அவங்க அப்பாவின் தொழில்ரீதியான நண்பரை சென்று பார்க்க சொன்னதும் அங்கே சென்று பார்த்தோம். அவர் உதவியுடன் பாண்டி பஜாரில் உள்ள சரவணா லாட்ஜில் இரண்டு அறை தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் அசதியில் எல்லோரும் நன்றாக தூங்கினோம். எங்களுக்குள் இருந்த ஒற்றுமை கொண்டு வந்த பைகள் எல்லாம் ஒரு அறையில் வைத்து கொண்டு, நாங்கள் எல்லோரும் ஒரு அறையில் படுத்து தூங்கினோம். எனக்கு சுமார் 4 மணி போல பசி அதிகம் எடுக்கவே, எங்காவது போய் சாப்பிட்டு வரலாம் என நினைத்து கிளம்பும் நேரத்தில், என்னை இதை எழுத வைத்த அந்த நகைச்சுவை நாயகன் கோபால கிருஷ்ணனும் எழுந்துவிட்டார். இன்னும் இரண்டு நண்பர்கள் எழுந்திருக்கவே நாங்கள் அனைவரும் சாபிடுவதற்கு வெளியில் கிளம்பினோம். இடையே நமது நகைச்சுவை நாயகர் எங்களை எல்லாம் பயமுறுத்தினார். சென்னையில் எங்களை எல்லாம் ஏமாற்றிவிடுவார்கள் என்று. சரி மதுரை பக்கத்தில் இருப்பவன் ஆச்சே, சற்று விவரம் தெரிந்தவனாக இருப்பான் என்று நினைத்தோம். பெரிய பெரிய உணவகத்திற்கு சென்றால் ஏமாற்றி விடுவார்கள், ஆகையால் நான் சொல்லும் உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார் நம் நகைச்சுவை நாயகர். சரி என்று அவன் பின்னே நாங்களும் தொடர்ந்து சென்றோம். இங்கே போகலாமா என்று எதாவது உணவகத்தை பார்த்து கேட்டால் அவனிடம் இருந்து வந்த ஒரே வார்த்தை ஏமாற்றி விடுவார்கள். சரி என்று நாங்களும் பின்தொடர்ந்தோம். எங்களுது நடை பயணம் ஆரம்பித்த நேரம் 4:30 . எங்கள் நடை பயணம் பாண்டி பஜார் வழியாக ஆரம்பித்து, பனகல் பூங்கா, G.N.செட்டி ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலை பிள்ளை ரோடு.....என்று பல ரோடுகள் கடந்து போகவே...நேரமும் சுமார் 6:15 ஆனது. அனைவரும் பொறுமை இழந்து கிடந்தனர். கடைசியாக எல்லோரும் எங்கயாவது சாப்பிட வேண்டும் என முடிவு பண்ணி, கடைசியாக நம் நகைச்சுவை நாயகரிடம் மச்சான் இந்த கடையிலயாவது சாப்பிடுவோம் என்று ஒரு சின்ன கடையை காட்டியதும், சரி என்று ஒப்புதல் வழங்கினார். சரி என்று உள்ளே சென்று சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிடும் பொழுதே அனைவருக்கும் மற்றுமொரு 2 மணி நேர நடை பயணம் இருக்கிறது என்று ஒரு வித சோம்பல் உணர்வு. பசி எனக்கு அதிகமாக இருக்கவே மின்னல் வேகத்தில் சாப்பிட்டு முடித்து வெளியில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு அதே மாதிரி இடத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. சரி என்று கொஞ்சம் தூரம் நடந்து பார்த்தும் எனக்கு தலை கால் சுற்றியது. நாங்கள் சாப்பிட இடம் நாங்கள் தங்கி இருந்த சரவணா லாட்ஜ் ஒட்டியுள்ள சந்தில் இருந்த கடை. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்...இடையில் நடந்த இரண்டு மணி நேர நடை பயணம் அசதி கூட தெரியாமல். இன்னும் பாண்டி பஜார் பக்கம் சென்றால் அந்த சின்ன கடையை பார்க்காமல் வந்ததில்லை. ஒரு சுகமான அனுபவம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment