நான் கல்லூரியில் படிக்கும் பொழுது வீட்டில் இருந்து சென்று வந்தேன். விஜயகாந்தும் என் கல்லூரியில் தான் படித்து வந்தான். அவனும் நானும் அவரவர் வண்டியில் ஒன்றாக செல்வோம். அவன் தமிழ் வழியாக 12(+2) வரை படித்தவன். ஆகையால் அவனுக்கு பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது என்று என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக மோசமானதாக இருக்கும். அந்த சாலையில் (உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சாலையே கிடையாது) கூட விரட்டி அடித்து கொண்டு போவான். என்னால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சமயம் அவனை போக சொல்லி விட்டு வழக்கமான எனது வேகத்தில் வருவேன். நாங்கள் பயணம் செல்ல வேண்டிய 10 கி.மீ நடுவே இரண்டே ஊர்கள் தான் இருக்கும். அது லட்சுமியாபுரம் எனும் புல்லாபட்டி மற்றும் கீழான்மறைநாடு. ஒரு நாள் அவன் வேகமா திரும்பி வருகையில், வந்த வேகத்தில் ஒரு கோழி அவன் வண்டி மீது மோத, எமதர்ம ராஜா அந்த கோழிக்கு பாச கயிறு வீசி விட்டார் போல. ஊர் மக்கள் எல்லாம் அவனை தகாத வார்த்தையில் வாசனை மழை பொழிய நான் கூடத்திற்கு நடுவே சென்று பார்த்தால், மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். எனக்கு தெரிந்தவர் வாயிலாக அவனை அந்த கூட்டத்தில் இருந்து விடுவித்து கூட்டி சென்றோம். அன்றில் இருந்து என் வேகத்திற்கு அவன் மாறி என்னுடன் பயணம் செய்வான். ஏதோ பேசி கொண்டே பயணம் செய்வோம். இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் கல்லூரி விட்டு திரும்பும் நேரம் சோகமாக இருந்தான். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கவலையாக இருந்தான். சரி என்று இரண்டு பெரும் கிளம்பினோம். வரும் வழியில் சாதரணமாக பேசி கொண்டு வந்தான். நாங்கள் ஆலங்குளம் வந்த பொழுது மணி 6:30 இருக்கும். நானும் அவனும் பிரியும் இடம் வந்ததும் இரண்டு பெரும் விடை பெற்று கொண்டோம். ஆனால் அது தான் கடைசியாக பெறக்கூடிய பிரிவினை என்று எனக்கு தெரியவில்லை. என் அப்பா வேலையில் இருந்து 12 மணிக்கு திரும்பி வந்ததும், என்னை எழுப்பி ஒரு அதிர்ச்சி தகவல் தந்தார் விஜயகாந்த் 6:45 மணிக்கு காலமாகி விட்டதாக. எப்படியும் அவன் வீட்டிற்கு செல்ல குறைந்தது 6:35 மணியாவது ஆகியிருக்கும். இடையில் 10 நிமிடத்தில் ஒருவனுக்கும் மரணம் ஏற்படுவது என்றால் வாழ்கை இவ்வளவு தானோ என்று தோன்றுகிறது. இதற்க்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியாமல்......முடித்து கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment