Thursday, April 15, 2010

படித்ததில் பிடித்தது...

நான் சமீப காலமாக இன்டர்நெட்டில் தேடுவது தமிழ் கவிதை தொகுப்புகளை தான். ஏன் இந்த தமிழ் மோகம் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கருத்தை ஆங்கிலத்தில் படிப்பதை விட தாய்மொழியில் படிக்கும் பொழுது அதன் சுவையை முழுமையாக உணர முடிகிறது. அது போல எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படைப்புகள் என்றால் சொல்வேந்தர் சுகிசிவம் படைப்புகள் என்பேன். ஒரு கருத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர். அவரது வெற்றி நிச்சயம் கதை தொகுப்பை தற்பொழுது படித்து கொண்டிருக்கிறேன். அவரின் சவாலே சமாளி ஒலிநாடாவை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் பெண் உறவு முறையை கூட ஆபாசம் இல்லாமல் சொல்லக்கூடியவர். நகைச்சுவையுடன், அறிவியலையும் விளக்குவதில் வல்லவர். சுகி சிவத்தின் பெருமையை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அதை போல் ஒரு சில நாட்கள் முன்பு ஒரு கவிதையை படிக்கும் பொழுது சிரிப்பலை மனதில் பாய்வது உணர முடிந்தது. அதன் சுருக்கத்தை சொல்கிறேன்.....கவிதை வரிகளாய் அல்ல ..

சாந்தமே உருவான சாந்தி மீது மாரியம்மாள் வந்தாள்.... பதினெட்டு ஊர் கூடிய இடத்தில சாந்தி அம்மன் அருள் கொண்டு ஆவேசமாய் இருந்தாள் ... என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்கிறாள்......நான் எப்படி சொல்வேன் ..... ஆவேசமாய் இருந்தாலும்.....அழகை இருக்கும் அவள்(சாந்தி) தான் வேண்டும் என்று....

தமிழ் மொழி அழகாய் தோன்றுகிறது.......இருப்பினும் தமிழன் எங்கும் வெற்றி கோடி நாட்டிட உலக மொழியை கற்ப்போம். இங்குள்ள அரசியல்வாதிகள் தனது ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மொழிக்கு சிவப்பு கோடி காட்டுவதை நிறுத்த வேண்டும்.

Friday, April 2, 2010

ஹர்ஷினி - 5 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

இன்று செய்தி தாளை பார்த்தவுடன் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஹர்ஷினி என்ற 10 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள். வகுப்பிற்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி தன தாயாரிடம் கவலை பட்டு அழுதுள்ளார். பின் தன மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த உணர்வு அந்த சிறுமிக்கு வர வேண்டும். இந்த வயதில் தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு ஏன் அவள் மனம் செல்ல வேண்டும்? இப்பொழுதுள்ள சிறார்கள் தங்கள் மனதை பக்குவபடுத்த பழக்கி விட வேண்டும். அதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான் செய்ய முடியும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைகாட்சி பெட்டிக்குள் முடங்கி விடுகிறார்கள். அங்கே திணிக்க படும் காட்சிகள் தான் இந்த மாதிரி தற்கொலைக்கு வழிவகுக்கிறது. நான் எப்பொழுதும் விளையாட்டு சேனல்களை தான் விரும்பி பார்ப்பேன். அப்படி பார்க்கும் பொழுது மல்யுத்தமும் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் என் அக்காவின் குழந்தை கட்டிலின் மேலிருந்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தான். யாரோ ஒருவரை தாக்கும் முனைப்புடன் மாறி மாறி விழுந்ததை கண்டதும் எனக்கு அந்த மல்யுத்தத்தை பார்த்து தான் இப்படி செய்கிறானோ என்று சந்தேங்கம் வந்தது. அன்றிலிருந்து அவன் இருக்கும் நேரத்தில் மல்யுத்தத்தை பார்ப்பதை தவிர்த்தேன். குழந்தைகளுக்கு எதை பார்க்கிறோமோ அதை செயலாக மாற்ற தான் நினைப்பார்கள். கடந்த வாரம் ரயிலில் பயணம் செய்தேன். பக்கத்தில் ஒரு கணவன், மனைவி ஒரு சிறு குழந்தை பயணம் செய்தது. அந்த நபர் சற்று களைப்பாற ரயில் கதவருகே போய் நின்றுள்ளார். சற்று நேரம் கழித்து அந்த கணவன் மனைவி தூங்கிய பின் அந்த குழந்தை ரயில் கதவருகே சென்று நிற்பதை பார்த்து அந்த வழியாக சென்ற ஒரு நபர் அந்த குழந்தையை பத்திரமாக கூட்டி வந்து அந்த பெற்றோரை வசை பாடியுள்ளார். ஆகவே, சினிமாவில் தற்கொலை காட்சிகளை அப்பட்டமாக காண்பிப்பதை தவிர்க்கலாமே. இதே வாரத்தில் மற்றொரு தற்கொலை முயற்சி நாளிதழில் வந்ததை படித்தேன். ஆம் இடைதேர்தலில் அதிமுக தோழ்வி அடைந்த விரக்தியில் ஒரு தொண்டர் ஒருவர் தீக்குளித்து கொண்டாராம். தன குடும்பத்தை விட தான் சேர்ந்த கட்சி முக்கியமானதா ?. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அந்த நபர் செய்த விஷயம் ஒரு முட்டாள்தனம். தூண்டுதல் என்று யாரும் இல்லை. ஆனால் ஏனோ அதே செயலை செய்த இந்த சிறுமியை நினைத்தால் பழியை யார் மீது சொல்லலாம் என்று சொல்லும் பொது......சினிமா என்று தான் எனக்கு தோன்றுகிறது. அந்த சிறுமியின் ஆன்மா ஷாந்தி அடைய வேண்டுகிறேன். இதை எழுதும் பொழுது அந்த பெற்றோரின் நிலையை கண்டால் கஷ்டமாக உள்ளது. எத்தனை கனவுகளுடன் இருந்திருப்பார், இன்றோ கருகிய நிலையில் அந்த குழந்தையை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும் என்ற ஒரு உணர்வை நினைக்கவே முடியவில்லை. இயல்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் இந்த மாதிரி தற்கொலை காட்சிகளுக்கு மட்டும் தங்கள் கொள்கைகளை விட்டு கொடுக்க முன் வரவேண்டும்.