நான் சமீப காலமாக இன்டர்நெட்டில் தேடுவது தமிழ் கவிதை தொகுப்புகளை தான். ஏன் இந்த தமிழ் மோகம் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கருத்தை ஆங்கிலத்தில் படிப்பதை விட தாய்மொழியில் படிக்கும் பொழுது அதன் சுவையை முழுமையாக உணர முடிகிறது. அது போல எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படைப்புகள் என்றால் சொல்வேந்தர் சுகிசிவம் படைப்புகள் என்பேன். ஒரு கருத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர். அவரது வெற்றி நிச்சயம் கதை தொகுப்பை தற்பொழுது படித்து கொண்டிருக்கிறேன். அவரின் சவாலே சமாளி ஒலிநாடாவை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் பெண் உறவு முறையை கூட ஆபாசம் இல்லாமல் சொல்லக்கூடியவர். நகைச்சுவையுடன், அறிவியலையும் விளக்குவதில் வல்லவர். சுகி சிவத்தின் பெருமையை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அதை போல் ஒரு சில நாட்கள் முன்பு ஒரு கவிதையை படிக்கும் பொழுது சிரிப்பலை மனதில் பாய்வது உணர முடிந்தது. அதன் சுருக்கத்தை சொல்கிறேன்.....கவிதை வரிகளாய் அல்ல ..
சாந்தமே உருவான சாந்தி மீது மாரியம்மாள் வந்தாள்.... பதினெட்டு ஊர் கூடிய இடத்தில சாந்தி அம்மன் அருள் கொண்டு ஆவேசமாய் இருந்தாள் ... என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்கிறாள்......நான் எப்படி சொல்வேன் ..... ஆவேசமாய் இருந்தாலும்.....அழகை இருக்கும் அவள்(சாந்தி) தான் வேண்டும் என்று....
தமிழ் மொழி அழகாய் தோன்றுகிறது.......இருப்பினும் தமிழன் எங்கும் வெற்றி கோடி நாட்டிட உலக மொழியை கற்ப்போம். இங்குள்ள அரசியல்வாதிகள் தனது ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மொழிக்கு சிவப்பு கோடி காட்டுவதை நிறுத்த வேண்டும்.
சாந்தமே உருவான சாந்தி மீது மாரியம்மாள் வந்தாள்.... பதினெட்டு ஊர் கூடிய இடத்தில சாந்தி அம்மன் அருள் கொண்டு ஆவேசமாய் இருந்தாள் ... என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்கிறாள்......நான் எப்படி சொல்வேன் ..... ஆவேசமாய் இருந்தாலும்.....அழகை இருக்கும் அவள்(சாந்தி) தான் வேண்டும் என்று....
தமிழ் மொழி அழகாய் தோன்றுகிறது.......இருப்பினும் தமிழன் எங்கும் வெற்றி கோடி நாட்டிட உலக மொழியை கற்ப்போம். இங்குள்ள அரசியல்வாதிகள் தனது ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மொழிக்கு சிவப்பு கோடி காட்டுவதை நிறுத்த வேண்டும்.