சமீபத்தில் என் அலுவலக ப்ளோகில் படித்த ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதை அப்படியே இங்கே எழுதுகிறேன். ஒரு வயதான தந்தை தன மகன் அருகில் அமர்ந்து இருந்தார். அங்கே சற்று தூரத்தில் ஒரு காக்கை வந்து ஒரு மரம் அருகில் அமர்ந்து இருந்தது. அதை நோக்கி தன் கை விரலை உயர்த்தி தன் மகனிடம் அது என்னது என்று வினவினார். மகன் தன் தந்தையிடம் அது காக்கா என்று சொல்லி விட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் செலுத்தினார். மீண்டும் ஒரு முறை அந்த தந்தை அது என்னது என்று வினவினார். மகன் மீண்டும் அது காக்கா என்று சொல்லிவிட்டு தன் கவனத்தை தொலைக்காட்சியில் முன்பை விட சற்று வேகமாகவே செலுத்தினான். மற்றும் ஒருமுறை அந்த தந்தை தன் மகனிடம் அது என்ன என்று காக்காவை நோக்கி கை உயர்த்தி கேட்டவுடன் மகன் கடும் கோபத்துடன் தன் தந்தையிடம் எத்துனை தடவை தான் அது காக்கா என்று சொல்ல.....உனக்கு புரியலையா அப்பா என்று கத்தினான். அந்த தந்தை தன் அறைக்கு சென்று ஒரு பழைய குறிப்பேடு(Dairy) எடுத்து வந்தார். சிறு வயது முதல் குறிப்பு எழுதும் பழக்கம் உடைய அந்த தந்தை ஒரு பக்கத்தை எடுத்து தன் மகனிடம் வாசிக்க சொன்னாராம். அந்த பக்கத்தின் குறிப்பு தன் மகனின் சிறு வயது செயல் பற்றிய குறிப்பு. அங்கே இவ்வாறாக எழுதியிருந்தார் அந்த தந்தை 'என் மகன் இன்று என் அருகில் அமர்ந்து கொண்டு என்னிடம் எங்கள் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த காக்காவை நோக்கி அது என்னது என்று என்னிடம் 23 தடவை கேட்டான். நான் அவனிடம் அது பெயர் காக்கா. அது பறக்க கூடிய ஒரு பறவை என்று விளக்கினேன். என் மகன் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நான் அவனை கட்டி பிடித்து கொண்டு கோபம் கொள்ளாமல் அது காக்கா என்று கூறினேன். மிகவும் சந்தோசமாக இருந்தது என் மகனின் செல்ல குரலில் அவன் அது என்னது என்று ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...' . ஆனால் இன்று அந்த மகன் தன் தந்தை மூன்றாவது முறை கேட்கும் பொழுதே பொறுமை இழந்து கோபத்துடன் பதில் கூறுகிறான். வயதாகும் பொழுது ஒரு முதியவர் குழந்தை குணம் கொண்டவராக மாறுகிறார்கள். ஆகவே சற்று பொறுமையாக அவர்களிடம் கையாள வேண்டும்.
குறிப்பு: மேற்கண்ட விஷத்தை நான் ஆங்கிலத்தில் படித்ததை என்னால் முடிந்த வரை தமிழில் மாற்றியுள்ளேன்.
குறிப்பு: மேற்கண்ட விஷத்தை நான் ஆங்கிலத்தில் படித்ததை என்னால் முடிந்த வரை தமிழில் மாற்றியுள்ளேன்.