வழக்கமாக நான் வேலையில் இருந்து திரும்பும் நேரம் இரவு 10 மணி நெருங்கி கொண்டிருக்கும். என் மொபைல் போனில் ஏதோ ஒரு ரேடியோ அலைவரிசையை வைத்து கொண்டு பயணம் செய்வேன். நேற்று ஒரு சுவாரசியமான அறிவுரை வழங்கிய அந்த தொகுப்பாளர் சொன்னதை இங்கே எழுதிகிறேன். ஏதோ ஒரு நபர், அவர் நெருங்கி பழகும் தோழியிடம் காதல் கொண்டுள்ளாராம். அதை எப்படி அந்த பெண்ணிடம் சொல்ல வேண்டும் என்று ஆலோசனை கேட்டு அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏதோ ஒன்று சொல்ல போக, அந்த பெண்ணின் நட்பை இழக்கவும் அந்த நபருக்கு விருப்பம் இல்லையாம். இதோ அந்த ரேடியோ தொகுப்பாளர் சொன்ன ஆலோசனைகள். ஒரு பெண்ணிடம் காதல் சொல்லுவதற்கு நேரம் பார்த்து சொல்ல வேண்டுமாம். அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தோன்றும் நேரம் பார்த்து அந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமாம். காதலிக்கும் நபர் அந்த பெண்ணிடம், அவள் பார்ப்பதற்கு தேவதை மாதிரி இருக்கிறாள் என்று அடிக்கடி பொய்யையாகவே இருந்தாலும் சொல்ல வேண்டுமாம். பின்பு அந்த பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எல்லா சமயங்களிலும் நாம் எடுத்த பேச கூடாதாம். சில நேரங்களில் அதை தவிர்த்து, சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு மன்னிக்கவும் தான் சற்று வேறு வேலையில் இருந்ததால் உன்னுடன் பேச முடியவில்லை என்று ஆரம்பித்து பின் புன்முறுவலுடன் பேச வேண்டுமாம். பின் நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் அந்த பெண்ணின் கண்களை பார்த்து பேச வேண்டுமாம். அந்த பெண், அந்த நபர் தன்னிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவள் என்னும் நேரம் பார்த்து காதலை சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனைகள் அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு. இதை எழுதுவது அந்த ரேடியோ தொகுப்பாளர் சொல்வது உண்மையேயானால் வேறு யாருக்காவது உதவட்டுமே என்று தான் :) எப்படி தான் யோசிக்கிறாங்களோ ?
Tuesday, November 10, 2009
Tuesday, November 3, 2009
இலங்கையின் போர் குற்றம்.....நிரூபிக்கப்படுமா ?
இலங்கையில் நடந்த இன படுகொலைக்கு காரணம்...மற்றும் போதிய ஆதாரம் வேண்டுமாம் இலங்கையை ஆளுபவனை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துவதற்கு. இதற்க்கு துணை நின்ற இந்திய மற்றும் சீன அரசாங்கமும் கூட போர் குற்றவாளிகள் தான். எதற்காக இந்திய துணை போக வேண்டும் ? தமிழனை காப்பாற்றுவதற்கு வழி வகை செய்யாதவருக்கு தமிழ் செம்மொழி மாநாடு நடத்த வேண்டுமாம் தமிழை காப்பாற்றுவதற்கு. இதற்க்கு ஒப்பனையாக கூற வேண்டுமானால் 'கண் கெட்ட பின்பு சூரிய நமச்காரமாம்' என்று ஒரு பழமொழி உண்டு. இந்தியா ஏன் இந்த இன படுகொலைக்கு துணை போக வேண்டும் ? ஒரு உயிர் போனதற்கு வஞ்சம் தீர்க்கவா ? எத்துனை லட்சம் உயிர்கள் மண்ணோடு மானாக சிதைந்துள்ளது? எத்துணை சிறார்கள் தன் தாய் தந்தையரை இழந்திருப்பர் ? அங்குள்ள தமிழனின் நிலை மட்டும் தான் அப்படியா என்றால் ... இங்குள்ள கடலோர மீனவ தமிழனின் நிலையும் மோசம். இலங்கை கடற்படை குண்டுகளுக்கு இரையாகி விடுவானோ என்ற நிலைமை. இந்திரா காந்தி கச்சதீவை யாரை கேட்டு தாரை வார்த்து கொடுத்தார் ? இரு நாட்டை நல்லுறவை வலுபடுத்தவா ? காயப்படுவது யார் என் தமிழன் தானே ? இதற்க்கு போராட்டம் அறிவித்தால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக போராடாது. ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு மாவட்டத்தில் போராட்டம் அறிவிக்கும் இங்குள்ள குடிமக்களுக்கு பறை சாற்றுவதற்கு 'நாங்களும் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு. இங்கே தேர்தலுக்கு முன்னே வாக்குறுதி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? இலங்கையில் தனி நாடு அமைப்போம் என்று அறைகூவல் விடுத்தார்கள் எங்கே ? அடுத்த தேர்தல் வரும் அப்பொழுதும் இதே மாதிரி வாக்குறுதிகள் வரும், நம் மக்களும் யார் தன் ஓட்டிற்காக அதிக பணம் கொடுத்தாரோ அவருக்கு விசுவாசம் காட்டி விட்டு திரும்புவர். நான் எல்லா மக்களையும் குறை கூறவில்லை. பெரும்பான்மையான மக்களின் பிரதிபலிப்பை சொல்கிறேன். இங்கே அரசியல் நடுத்துபவன் என்றும் பல்லக்கில் பயணம் செய்வான். அடுத்த ஐந்தாண்டு காலம் பல்லக்கை தூக்கி செல்பவனாக தான் மக்கள் இருக்கின்றனர். இலங்கையில் ஆளுபவனும் இனி வரும் காலத்தில் விடுதலை புலிகளை ஒழித்த ஒரே அரசியல் தலைவன் என்று சொல்லி தன் அரசியல் ஆசனத்தை தக்க வைத்து கொள்வான். பொன்செகோ தன் இரு நாட்டு பிரஜை(Dual Citizenship) அங்கீகாரத்தை நிலை நிறுத்தி கொள்ள போராடுகிறார். ஏன் இதை பயன் படுத்தி அவரும் அரசியல் ஆதாயம் தேடலாம். மனித உரிமை மீறப்பட்ட இலங்கை போருக்கு ஆதாரம் கேட்கும் எல்லோரும் மூடர்களே. என் கண்ணோட்டத்தில் ஐக்கிய நாட்டு சபை தலைவர் பான்-கீ-மூனுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதினை கொடுத்திருக்கலாம். உலகத்தில் அமைதியை நிலை நாட்டியதர்க்காக அல்ல...அதிகாரம் இருந்தும் தன் கண் முன்னே நடந்த இன படுகொலையை கண்டு அமைதி காத்ததற்காக.
Subscribe to:
Posts (Atom)