Tuesday, November 10, 2009

பெண்களிடம் காதல் சொல்ல வேண்டிய தருணம்... ரேடியோ தொகுப்பாளரின் ஆலோசனை.. :)

வழக்கமாக நான் வேலையில் இருந்து திரும்பும் நேரம் இரவு 10 மணி நெருங்கி கொண்டிருக்கும். என் மொபைல் போனில் ஏதோ ஒரு ரேடியோ அலைவரிசையை வைத்து கொண்டு பயணம் செய்வேன். நேற்று ஒரு சுவாரசியமான அறிவுரை வழங்கிய அந்த தொகுப்பாளர் சொன்னதை இங்கே எழுதிகிறேன். ஏதோ ஒரு நபர், அவர் நெருங்கி பழகும் தோழியிடம் காதல் கொண்டுள்ளாராம். அதை எப்படி அந்த பெண்ணிடம் சொல்ல வேண்டும் என்று ஆலோசனை கேட்டு அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏதோ ஒன்று சொல்ல போக, அந்த பெண்ணின் நட்பை இழக்கவும் அந்த நபருக்கு விருப்பம் இல்லையாம். இதோ அந்த ரேடியோ தொகுப்பாளர் சொன்ன ஆலோசனைகள். ஒரு பெண்ணிடம் காதல் சொல்லுவதற்கு நேரம் பார்த்து சொல்ல வேண்டுமாம். அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தோன்றும் நேரம் பார்த்து அந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமாம். காதலிக்கும் நபர் அந்த பெண்ணிடம், அவள் பார்ப்பதற்கு தேவதை மாதிரி இருக்கிறாள் என்று அடிக்கடி பொய்யையாகவே இருந்தாலும் சொல்ல வேண்டுமாம். பின்பு அந்த பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எல்லா சமயங்களிலும் நாம் எடுத்த பேச கூடாதாம். சில நேரங்களில் அதை தவிர்த்து, சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு மன்னிக்கவும் தான் சற்று வேறு வேலையில் இருந்ததால் உன்னுடன் பேச முடியவில்லை என்று ஆரம்பித்து பின் புன்முறுவலுடன் பேச வேண்டுமாம். பின் நேரில் சந்திக்கும் பொழுது எல்லாம் அந்த பெண்ணின் கண்களை பார்த்து பேச வேண்டுமாம். அந்த பெண், அந்த நபர் தன்னிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவள் என்னும் நேரம் பார்த்து காதலை சொல்ல வேண்டுமாம். என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனைகள் அந்த ரேடியோ தொகுப்பாளருக்கு. இதை எழுதுவது அந்த ரேடியோ தொகுப்பாளர் சொல்வது உண்மையேயானால் வேறு யாருக்காவது உதவட்டுமே என்று தான் :) எப்படி தான் யோசிக்கிறாங்களோ ?

No comments: