நம் பாரம்பரியம் உறவுகளை என்றும் ஆதரித்து கொண்டு தான் இருந்துள்ளது. எனது வாழ்க்கையில் உறவுகளால் ஏற்பட்ட ஆறுதலும், வேதனையையும் எழுதுகிறேன். மிகவும் நம்பிய உறவுகள் கை விட்ட பொழுது, எங்கோ இருந்து வந்த உறவுகள் ஆறுதல் அளித்துள்ளது. என் பெரியப்பாவின் இரண்டு மகள்களின் திருமண வேலைகளில் என் அப்பாவின் பெரும் பங்களிப்பு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்பா அவர் அண்ணன் மகள் திருமண பத்திரிக்கையை உறவுக்காரர்களுக்கு வைப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு மதுரை வண்டிக்கு கிளம்பி செல்வார். சுமார் 2 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று நான் அப்பாவை வழி அனுப்ப செல்வேன். அதை எங்கள் வீட்டு கல்யாணம் போல் தான் நினைத்து நாங்கள் வேலை செய்தோம். என் அப்பா மட்டும் அல்ல என் அம்மா மற்றும் என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம். அவர்களின் இரண்டாவது மகள் கல்யாணத்தன்று எனக்கு செமஸ்டர் பிரக்டிகல் தேர்வு இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் சாப்பிடாமல் சென்று அன்று தேர்வு எழுதினேன். வேறு எந்த எண்ணமும் இல்லை என் அக்காவின்(பெரியப்பா மகள்) கல்யாணம் என்ற ஒரு சந்தோசமான எண்ணோட்டம் மட்டும் தான். ஆனால் அவர்களின் பிரதிபலிப்பு என் உடன் பிறந்த அக்கா கல்யாணத்தில் அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று. பெரியம்மாவிற்கு முதுகு வழியாம். பெரியப்பாவின் மூத்த மகளுக்கு மூன்று நாள் தான் விடுமுறை இருந்ததாம். இரண்டாவது மகளுக்கோ காரணம் கூட தெரியவில்லை. இவர்களுக்கு மத்தியில் ஒரு தூரத்து உறவுக்காரர், அவர் பெயர் மறக்கன்னு. என அக்கா கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எமனின் பாசக்கயிரில் இருந்து தப்பியவர். அவர் நெடுதூரம் பயணம் செய்து என் அக்கா கல்யாணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இங்கே என் மனது வேதனை பட்டது யாருடன்....காயபட்டது யாருடன் என்று சொல்லி தெரிய வேண்டுமா ? நாளை மறு தினம் என் பெரியப்பாவின் மகன் கல்யாணமாம். ஏதோ மூன்றாவது மனிதருக்கு பத்திரிக்கை வைப்பது போல பத்திரிக்கை வந்தது அஞ்சல் வழியாக. நேரில் வந்து திருமண பத்திரிக்கை வைக்க முடியவில்லை என்று என் அப்பாவிடமாவது சொல்லி இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு இல்லை. அப்படியொரு கல்யாணத்தில் கலந்து கொள்வதை விட தவிர்ப்பதே நல்லது என்று முடிவாயிற்று. இருந்தாலும் ஏதோ ஒரு மூளையில் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று என்னோட்டமும் இருக்கிறதை மறைக்க விரும்பவில்லை. இருந்தாலும் பழமொழியை நினைவு கூற வேண்டும் அல்லவா 'மதியாதோர் தலைவாசல் மிதியாதே'. என் உடன் பிறந்த அண்ணனாக தான் என் பெரியப்பா மகனை நினைத்திருந்தேன். அவன் எனக்கு என்று எதுவும் செய்ததில்லை. என் கல்லூரி படிப்பை முடித்து நான் 18 மாதங்களாக வேலை தேடி கொண்டிருந்தேன். ஒரு நாள் கூட நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டது கூட கிடையாது. முன்னொரு தடவை satyam computer services written test இல் தேர்வானால் என்னிடம் சொல்லிருந்தால் நான் உதவி செய்திருப்பேன் என்று என் பெரியப்பா மகன் என் அக்காவிடம் சொல்லியதை நினைவு கூர்ந்து என்னிடம் நான் தேர்வானதும் என் அக்கா சொல்லியுருந்தார். நான் என் அண்ணனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் என் பெரியம்மா எடுத்தார்கள், சாயுங்காலம் அண்ணன் வந்ததும் தொடர்பு கொள்ள சொல்கிறேன் என்றார். நான் சாயுங்காலம் எப்படியும் என் அண்ணன் என்னை தொடர்பு கொள்வார் என்று நினைத்தேன். நாட்கள் கடந்தது, ஆனால் அவரிடம் இருந்து ஒரு தகவல் கூட வரவில்லை. ஆனால் அதற்காக வருத்த படவில்லை. என் அண்ணனை பட்ட பெயர் சொல்லி என் முன்னால் சொன்னவரிடம் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு உதவி செய்யவில்லை என்று வருத்தப்படவில்லை ஒரு சின்ன ஏமாற்றம் அவ்வளவுதான். நான் வேலை தேடிய காலத்தில் ஒரு மீன் விற்பவர்(பெயர் ரவி, இலங்கை அகதி) என்னிடம் bio-data கேட்டார் அவர் உறவினர் மூலம் உதவி செய்வதற்காக. என் 21 வயது வரை சித்திரக்கனி சித்தப்பாவை பார்த்தது கூட கிடையாது. நான் வேலை தேடி கஷ்டபடுகிறேன் என்று கேள்வி பட்டு, என் அப்பாவை தொடர்பு கொண்டு, என்னை ஹைதராபாத் வர சொன்னார். அவர் வீட்டில் தங்கி வேலை தேடுமாறு சொன்னார். என் அண்ணன் ரமேஷ், ராஜேஷ், மற்றும் என் தம்பி சுரேஷ் நன்றாக பழகினர். என் சித்தி என்னை தன் மகன் போலவே கவனித்து கொண்டார். முருகானந்தம் சித்தப்பா என்னிடம் நன்றாக பழகுவார். எல்லாம் எனக்கு புதிதாக அறியப்பட்ட உறவுகள். என்னை ஆதரித்த உறவுகளுக்கு நன்றி சொல்வதற்காக இதை எழுதுகிறேன். குறிப்பாக ரவிக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். ரவியின் மகன் கணியூற்றனி நன்றாக இருக்க வேண்டும் என்று என் இறை பிரார்த்தனையில் வேண்டுகிறேன். அதற்காக காயபடுதியவர்களை வசை பாட விரும்பவில்லை.........அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment