நான் கடந்த வாரம் வேட்டைக்காரன் திரைப்படம் பார்த்தேன். ஏன் விஜய்க்கு இப்படி படம் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ ? ஒரு திரைப்படம் பார்த்து திரையரங்கை விட்டு வெளிவரும்போது அந்த திரைபடத்தின் தாக்கம் ஒரு சில நிமிடங்களாவது இருக்க வேண்டும். ஆனால் திரைப்படம் எப்பொழுது முடியுமோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் சன் தொலைக்காட்சியினர் மட்டும் எப்படி தான் இந்த திரைபடத்தை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று பொய் விளம்பரம் செய்கிறார்களோ ? நான் சமீபத்தில் பார்த்த மோசமான திரைப்படம் என்றால் இதை தான் முதலாக சொல்வேன். நான் ஒரு காலத்தில் விஜய் படங்களை விரும்பி பார்த்தவன். ஆனால் இப்பொழுது விஜய் படம் என்றால் பார்பதர்க்கே மனம் இல்லாமல் பார்க்க வேண்டியுள்ளது. சக நடிகர்கள் திரைபடத்திற்காக தங்களை பல வடிவங்களில் திரை முன் கொண்டு வரும் காலத்தில், தலையில் கலர் அடித்தல் ஒரு நாயகன் என்றும் கலர் இல்லை என்றால் வேறு ஒரு விஜய் என்றும் நம்மிடம் புதிர் போடுகிறார். சக நடிகரான சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் அட்டகாசமாக தன்னை திரையில் வெளிபடுத்தியிருப்பார். வேட்டைக்காரன் திரைபடத்தில் ஒரு காட்சியில் கல்லூரி பேராசிரியர் பாடம் எடுபதர்க்கு முன்னாள் ஒரு மனைவியை பார்த்து சரியாக தலை முடியை வைத்து கொள்ளாமல் இருப்பதை கண்டிப்பார். ஆனால் கதாநாயகன் விஜய் சட்டை பித்தானை கழற்றி விட்டு பனியன் தெரியும் படி உட்கார்ந்திருப்பார். சுருக்கமாக சொல்ல போனால் விஜய் தன படத்தில் கதையை நம்பி நடிக்க வேண்டும். படம் பார்த்து முடித்தவுடன் இரண்டு அரை மணி நேரம் வீனக்கியதருக்கு பதிலாக வீட்டில் தூங்கியிருக்கலாமே என்று நினைக்க தோன்றுகிறது. தரமான படங்களின் வருகை தமிழ் சினிமாவில் குறைந்து வருகிறது என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்தார் நிம்மதியாக இருப்பர் நல்ல வேலை இந்த படத்தை சன் பிச்சருக்கு போனி செய்தாச்சு என்று. விஜய் காதலுக்கு மரியாதை மாதிரி ஒரு நல்ல கதையம்சம் உள்ள படம் தர வேண்டும். இல்லையேல் சீக்கிரம் நடையை கட்ட வேண்டியது தான். :) . விஜய் ஆண்டனி மட்டுமே படத்திற்கு ஒரு ஆறுதல்.
Wednesday, January 13, 2010
Subscribe to:
Posts (Atom)