Wednesday, September 1, 2010

தபால்கார தம்பதிகள்

கடந்த வாரம், நான் வசிக்கும் தெருவில் 40 வயது மதிக்கதக்க ஒரு பெண் எதையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். பிள்ளையார் கோவிலை சுற்றுவதை போல எங்கள் தெருவையே சுற்றி சுற்றி வந்து நடந்து கொண்டிருந்தார். என் அப்பா அந்த பெண்ணிடம், எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்கள். அதற்க்கு அந்த பெண் தன்னை அந்த பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தபால்களை கொடுப்பவர்(Post [wo]man) என அறிமுகபடுத்தி கொண்டார். ஒரு விலாசத்தை கேட்டார் அந்த பெண்மணி, என் அப்பா அந்த முகவரி இருக்கும் வீட்டை அடையாளம் காட்டினார். அந்த பெண்மணியிடம், ஏன் நடந்தே வர்றீங்க, ஒரு டூ-வீலர்ல வர்ற வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணிக்கு சைக்கிளே ஓட்ட தெரியாதாம். அப்புறம் எப்படி எல்லா தபால்களையும் கொடுக்க முடியும் என்று என் அப்பா கேட்டுள்ளார். அவரோ, முடிந்தவரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் நடந்து சென்று தபால்களை கொடுப்பாராம். மற்றவை எல்லாம், திரும்ப தபால் நிலையத்தில் வைத்து விடுவாராம். அவருடைய கணவரும், பக்கத்துக்கு ஊரில் போஸ்ட்மேன் வேலை செய்கிறாராம். அவருடைய வேலையை சீக்கிரம், முடித்து கொண்டு இங்க வந்து அவர் மனைவியின் வேலையை செய்வாராம். எங்கள் ஏரியாவில் தபால்க்காரர் , ஞாயிறு கிழமைகளிலும் வேலை செய்கிறார். ஒரு நாள், காலை 6 மணி அளவில், வெளியில் சென்று கொண்டிருக்கையில், கையில் தபால்களுடன், விலாசத்தை தேடி அந்த கணவர் அலைந்து கொண்டிருந்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிறந்த தம்பதிகள். எப்படியோ எங்களுக்கு வர வேண்டிய கடிதம் வந்து சேர்ந்தால் கூடுதல் நலம் :)