Friday, October 30, 2009

சிவாஜி படம் முதல் நாள் பார்த்த அனுபவம்...

சிவாஜி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எல்லோரிடம் நிலை கொண்டிருக்க, நானும் அந்த படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்தது. சரி பதிவு செய்து படம் பார்க்கலாம் என்று திரையரங்குளுக்கான இணைய தளத்திற்கு சென்று பார்த்தால், எங்கும் கிடைக்கவே இல்லை. சரி திரைப்படம் வெளியான இரண்டு வாரம் கழித்து பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு 7 மணி போல லக்ஷ்மணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாப்ளே, சிவாஜி படத்திற்கு 2 டிக்கட் இருக்கு, போகலாமா? என்றான். சரி என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் விடை பெற்று கொண்டு, கேசவன், நான் மற்றும் லக்ஷ்மணன் படத்துக்கு போவதற்கு தயாரானோம். நங்கநல்லூர் வெற்றி திரையரங்குக்கு பதிவு செய்திருந்தோம். மூவரும் ஒரே வண்டியில் பயணம் செய்தோம். நல்ல வேளை, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிடிபடவில்லை. திரையரங்கின் தெரு முனையிலே கூட்டம் அலை மோதியது. நம்மிடம் தான் பதிவு செய்த டிக்கெட் இருக்கிறதே என்று கூட்டம் இருந்த திசை நோக்கி நடந்தோம். இருக்கும் கூட்டத்தை பார்த்தால், திரையரங்கின் நுழைவு வழி அருகே இருந்தால் தான் உள்ளே போக முடயும் என்றும் முந்தியடித்து கொண்டு நுழைவு வாயில் அருகே சென்றோம். நுழைவு வாயிலை திறந்தால் நாங்கள் முதல் அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் முன்னே இருந்தது. சுமார் 45 நிமிடமாவது அங்கே நின்று கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து அந்த திரையரங்கில் வேலை பார்ப்பவர் எங்கள் சீட்டை பார்த்து, நீங்கள் போக வேண்டிய திரையரங்கு இது அல்ல...பக்கத்தில் உள்ள திரையரங்கு என்றார். எங்களுக்குள் சிரிப்பு அடக்கவே முடியவில்லை......ஏனென்றால் எங்களுக்குளே யார் முதலில் உள்ள போவார்கள் என்ற போட்டி வேறு....சரி என்றும் பக்கத்தில் உள்ள திரையரங்கிற்குள் போனாள், அங்கே கூட்டத்தை கட்டு படுத்த காவலாளிகள் எல்லாம் பனியில் இருந்தனர். பின் அங்கும் ஒரு மணி நேரம் காத்து கிடந்தது அந்த படத்தை பார்த்து முடித்தோம். படத்தில் பிரம்மாண்டம் அதிகம்...ரஜினிக்கே உரிய அந்த ஸ்டைல். மொத்தத்தில் எங்கள் பொழுது நன்றாக கழிந்தது... :)

No comments: