Friday, October 23, 2009

சென்னையில் சுற்றி திரிந்த நாட்கள்...

ப்ராஜக்ட் செய்ய சென்னை வந்திருந்த பொழுது நடந்த சில நினைவுகள். அப்பொழுது மனதில் கவலை எதுவும் தெரியாதவர்களாய் இருந்த நாட்கள். ஷாலோம் ஆண்கள் தங்கும் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்தோம். வாழ்கையை தேடி சென்னை வந்து தங்கிருந்தவர் மத்தியிலே நாங்கள் இருந்தோம். ஒரு மாதத்திற்கு 8 நபர்கள் தங்க 4000 ரூபாய் கொடுத்து தங்கியிருந்தோம். நாங்கள் ப்ராஜெக்ட் செய்ய போன நாட்களை விட வெளியில் சுற்றி திரிந்த நாட்கள் தான் அதிகம். கில்லி படம் வெளியான நேரம் அது. ஏற்கனவே அந்த படத்தை பார்த்தாலும் நண்பர்களுடன் சென்னையில் பார்க்க வேண்டும் என உதயம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம். பின்பு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் எல்லாம் போனது மறக்க முடியாது. நாங்கள் அனைவரும் வளசரவாக்கம் Orbit Data Controls ல ப்ராஜெக்ட் செய்தோம். ஏதோ கடமைக்குன்னு போவோம். மொத்தமாகவே ஐந்து நாள் தான் போயிருப்போம். அப்புறம் காசு கொடுத்து பொருள் வாங்கிற மாதிரி ப்ரொஜெக்டை விலை கொடுத்து வாங்கி வந்தோம். இடையில் சென்னையை சுற்றி பார்க்க தான் தினமும் எங்காவது கிளம்பி போவோம். இரவு தூங்குவதற்கு முன்பு யார் தண்ணி குடிக்க போனாலும் அவன் நிலைமை கஷ்டம் தான். எனென்றால் அவன் தான் மற்ற அத்தனை பேருக்கும் தண்ணி பிடித்து குடுக்க வேண்டும். எப்படியும் அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு 15-20 நிமிடம் ஆகும். ஒரு நாள் மகாபலிபுரம் சென்றோம். வரும் வழியில் கானத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாயாஜால் தியேட்டேர் நுழைவு வாயழுக்கு அருகே சென்றோம். சரி படம் பார்த்து போகலாம் என நினைத்து உள்ளே சென்றோம். மொத்தம் எங்களிடம் இருந்த ரூபாய் நானூறை தாண்டாது. உள்ளே சென்று டிக்கெட் விலை கேட்டவுடன், எங்களுக்கு அதிர்ச்சி. நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என்றனர். எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள திரையரங்குகளில் பொதுவாக அதிக பட்சமே 50 ரூபாவை தாண்டாது. சரி என்று வரும் வழியில் சென்னை முதலை பண்ணை சென்றோம். ஐந்து ரூபாய் தான் நுழைவு கட்டணம். ஒரு மணி நேரம் அங்கு கழிந்தது. பின்பு அந்த பண்ணைக்கு பின்புறம் இருந்த கடலுக்கு பக்கத்தில் போய் விளையாடினோம். கடல் அலைகளுக்கு நடுவே எங்கள் பெயர்களை எழுதி வைத்தோம். எங்கள் பெயரை விட பக்கத்தில் இருக்கும் நண்பன் பெயரையும் அவனுக்கு என்று நாங்களாக உருவகபடுத்தி வைத்திருக்கும் பெண் பெயரையும் எழுதி மகிழ்ந்த நாட்கள் என்றும் இனியது. பின்பு அங்கு இருந்து புறப்பட்டு வீடு திரும்பினோம். பின் ஒரு நாள் சென்னையில் வேலை கிடைத்த பின்பு உதயம் தியேட்டேருக்கு தனியாக சென்றேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் நான் ஒரு நாள் கில்லி படம் என் நண்பர்களோடு பார்த்த அதே இடம். ரவி, விஜி, கோபால் அமர்ந்து இருந்த இடத்தில் வேறு யாரோ இருக்க ஒரு வித நன்றி இறைவனுக்கு எனக்கு அதே இருக்கை கொடுத்ததற்கு. இன்றும் நடேசன் தெருவில் பாய் கையேந்தி கடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சாபிட்டத்தை நினைத்தால் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. இதை எழுதுவதன் நோக்கம் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய சந்தோஷத்திற்கு தான்.

No comments: