நான் வெளிவர இருக்கும் சென்னையில் ஒரு மழை காலம் திரைப்படம் பற்றி எழுதவில்லை. நேற்று முன்தினம்(28/10/2009) அன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. நான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைவது என்பது எனக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எனக்கு மழையில் நனைவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரியில் படிக்கும் பொது என் வீட்டில் இருந்து தான் போய் வந்தேன். அப்பா எனக்கு TVS Champ வாங்கி கொடுத்திருந்தார். ஆலங்குளத்தில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் பாதை மிக மோசமாக இருக்கும். எனது பயணம் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள காட்டு பகுதிக்கு நடுவே தான். கீழராஜகுலராமனுக்கும் செவல்பட்டிக்கும் நடுவே சாலை என்பதே கிடையாது. இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு இருக்கும். எப்பொழுதாவது மழை பெய்தால் மட்டுமே அந்த ஆற்றில் தண்ணீரை பார்க்க முடியும். வேறு வழியாக செல்ல வேண்டும் என்றால் வெம்பகொட்டை வழியாக போகலாம். மழை நேரங்களில் நான் நனைந்து கொண்டே தான் பயணம் செய்வேன். மழைக்காக என்றும் நான் கல்லூரி சென்ற நாட்களில் ஒதுங்கியதே இல்லை. நான் மட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்லும் பொழுது ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்து கொண்டே பயணம் செய்வதில் இருக்கும் சுகமே தனி தான். அந்த தருணம் எனக்கு நானே இளையராஜா, எனக்கு நானே ஒரு S.P.B ஆக நினைத்து கொள்வேன். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நனைந்திருந்தாலும் கூட.. ஆலங்குளத்தில் உள்ள சங்கரேஷ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும் இரண்டு வடையும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் பொழுது வழக்கமாக என்னிடம் 'தம்பி எங்க படிக்கிறீங்க? உங்க வீடு எங்க இருக்கு?' என்று கடைக்காரன் என்னிடம் கேட்பார். நான் முழுவதுமாக நனைந்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் அம்மா எனக்கு தலை துவட்ட துண்டை வைத்து கொண்டு எனக்காக காத்திருப்பார். வேலை தேடி சென்னை வந்த நாளில் இருந்து, அப்படி ஒரு நாளும் மழையில் நான் திரும்ப நனைந்தது இல்லை அதற்க்கான வாய்ப்பும் கிடைத்தது இல்லை. சென்னையில் மழை என்பதே அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. நேற்று முன்தினம்(28/10/2009) நீண்ட நாள் கழித்து மழைகளுக்கு நடுவே பயணம் செய்தது மனதிற்கு சந்தோசமாக இருந்தது. என்ன சங்கரேஸ்வரி டீ ஸ்டாலுக்கு பதிலாக cofee vending machine ல பட்டனை அழுத்தி டீ எடுத்து கொண்டிருக்கையில் இதை எழுத வேண்டும் என நினைத்து இங்கே எழுதிகிறேன். எழுதுவதற்கு நடுவே சில சிரிப்புகள்..... எழுதுவதக்கான காரணமும் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய அந்த புன்முறுவலுக்கு தான். :)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment