Tuesday, March 9, 2010

என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

முதலில் என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நான் இன்று வாழ்க்கையில் ஓரளவிற்கு சந்தோசமாக வாழ்வதற்கு ஆதாரமே என் அம்மா மற்றும் என் அப்பாவினால் தான். என்னுடைய சிறு வயதில் என் காலில் கட்டி மாதிரி இருக்கும். நடப்பதற்கு மிகவும் கஷ்ட படுவேன். ஆனால் விளையாட்டு என்றால் மட்டும் அந்த ஏரியாவில் இருக்கும் பழனி, விஜி, செந்தில், ரமேஷ் (எல்லோரும் என்னை விட வயது கூட உள்ளவர்கள்) அண்ணன்கள் கூட சென்று விளையாடுவேன். விளையாட்டின் நடுவே என் அம்மா என்னை கண்டித்து கூட்டி சென்று விடுவார். நான் நடக்க கஷ்ட படுவேன் என்பதற்காக என்னை பள்ளிக்கூடம் வரை என் அம்மா என்னை தூக்கி கொண்டு செல்வார். அது போல மணி 12:15 நெருங்கும் பொழுது பள்ளியறை வாசல் கதவருகே என் அம்மாவின் முகம் பளிச்சென்று தெரியும். எனக்காக மதிய உணவை ஊட்டுவதற்காக வந்திருப்பார். அது போல சாயுங்காலம் பள்ளி முடியும் நேரம் என் அம்மா வந்தது என்னை சுமந்து கொண்டு செல்வார். பின்னர் மாரிமுத்து சார் டியூஷன் செல்லும் பாதை வரை என் அம்மா என்னை சுமந்து கொண்டு கூட்டி செல்வதை என்னால் என்றும் மறக்க முடியாது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். சில நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் என்றொரு மருத்துவர் என் காலில் இருந்த கட்டி மாதிரி இருந்ததற்கு காரணம் வைட்டமின் குறைபாடு என்று சொல்லி ஒரு மருந்து கொடுத்தார். பின்பு அந்த காயம் முழுவதும் குணமானது. நான் +2 படிக்கும் பொழுது அதிகாலை எழுந்து படிக்கையில் , என்னுடன் என் அம்மாவும் விழித்து கொண்டு நான் சோர்வாக இருக்கும் நேரத்தில், காப்பியும் எதாவது சாப்பிட குடுப்பார். பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி காலமும் முடிந்தது. நான் வேலை தேடிய நாட்களில் நான் பல முறை தோல்வி அடைந்தாலும், என் அப்பா மற்றும் என் அம்மா எனக்கு ஆறுதல் வார்த்தை கூறி என்னால் முடியும் என்று ஒரு வார்த்தை சொல்வர். கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஒரு வேலை கிடைத்தது. அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் முடிந்தாகிவிட்டது. எனது இந்த சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளம் இட்ட என் அம்மா மற்றும் என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும். இந்த தருணத்தில் என் அம்மாவிற்கு இந்த வலை குறிப்பின் மூலம் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

No comments: