ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் திருப்பூர் நகரம். திருப்பூர் ஏற்றுமதி குழுமம் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. நலிந்து வரும் கைத்தறி ஆடை தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, தமிழக அரசு தன கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறையாவது கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். இந்த நடைமுறை கேரளாவில் பின்பற்ற படுவதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய ஆண் தலைமுறையினர் வேஷ்டி உடுத்த கற்று கொள்வதே தன திருமண தினத்தில் இருப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதி குழுமத்தின் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், நலிந்து வரும் கைத்தறி தொழிலை காப்பற்ற்வதர்க்கு வழி கிடைக்கும். என் மாமா ஒரு கைத்தறி தொழிலாளி. அவர்களுக்கு சம்பளம் வாரம் ஒருமுறை. வாரம் ஒன்றுக்கு அதிக patchஅம ஆயிரம் ரூபாவை தாண்டாது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த வருமானத்தில் எப்படி தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததுண்டு. வருடம் ஒரு முறை தர்ணா என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் சம்பள உயர்வை கேட்டு. ஆனால் கைத்தறி கடை சில நாட்கள் மூடப்படும். பின் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டு அழைக்கபடுவர் ஒரு சிறு சம்பள உயர்வாக இருக்கலாம் இல்லை பழைய சம்பளத்துக்கே திரும்ப அழைக்கபடுவர். இப்படி பட்ட தொழிலாளர் நலனுக்காவது நாம் கைத்தறி பொருள்களை உபயோகிக்க நம்மை தயார் செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment