தமிழக பட்ஜெட் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வரி இல்லாத பட்ஜெட். சிறு மீனை போட்டிருக்கிறார்கள் திமிங்கலத்தை தன வலையில் வீழ்த்த. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒரு அம்சம் இன்னும் 44 லட்சம் இலவச தொலைக்காட்சிகள் விநியோகிக்க பட உள்ளனவாம். எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படுகிறது என்று புரியவில்லை. வசதி இல்லாதோருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் ஐந்தாடுகளில் கணக்கெடுத்து பார்த்தால் (4400000*5) சுமார் இரண்டு கோடிகளுக்கு மேல் இந்த இலவச தொலைகாட்சி அளிக்கபட்டிருக்கிறதா ? அப்படி எடுத்துக்கொண்டால் சுமார் 8 கோடி மக்கள் தொகையில், இரண்டு கோடி நபர் வசத்தில் இல்லாதவரா ? நான்கில் ஒருவன் வசதி இல்லாதவன் என்றால் அவன் வாழ்க்கை தரத்தை இந்த அரசாங்கம் எப்படி முன்னேற்றியிருக்கிறது. மக்களை சோம்பேறிகளாக ஆக்கியுள்ளது என்று தான் எனக்கு தோன்றுகிறது. நாளொன்றுக்கு 50000 ரூபாய் வருமானம் ஈட்டும் கடைகளில், கேமரா கண்காணிப்பதற்கு இந்த இலவச தொலைக்காட்சிகள் பயன்படுத்த படுகிறதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இலவச தொலைகாட்சி வழங்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன ? அடுத்த முறையும் தாங்களே அரியணையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த பட்ஜெட். இலவசங்களை அள்ளி தெளித்திருகிறார்கள். மூவாயிரம் கோடி பற்றாகுறை ஏற்படுமாம். ஏன் இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்க்கு என்ன அவசியம் ? இன்னும் ஓரிரு மாதங்களில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும். டீலக்ஸ் பேருந்து சாதாரண பேருந்துகளாக மாற்றப்படும். காசை வாங்கி ஓட்டை போடும் நிலை இன்று முளைத்துள்ளது. சில ஆயிரங்களுக்கு மனிதர்கள் இங்கே தன சுய உரிமையை இழக்கின்றான். இப்படி இருக்கும் தருவாயில் இந்தியா எங்கே முன்னேற போகிறது. தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சி உறுப்பினரும் எதிர் கட்சி உறுப்பினரும் சந்தித்து கொள்வதே கிடையாது. வேட்பாளர் ஒருவன் மற்றொருவரை அடையாறிலே எதிர்த்து பிரச்சாரம் செய்தால் , அந்த வேட்பாளர் இவரை தாம்பரத்தில் விமர்சனம் செய்வார். அமெரிக்காவிலே எதிரெதிர் ஜனாதிபதி வேட்பாளர் கூட மக்கள் மன்றம் முன்பு கூடி தங்கள் கொள்கைகளை விளக்கி கூறுவர். மனிதனே, சில ஆயிரத்திற்கு உன்னை விற்று உன் சுதந்திரத்தை இழக்காதே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment