Tuesday, March 9, 2010

7/G ரெயின்போ காலனி படம் பார்த்த அனுபவம்.

கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு நடந்து கொண்டிருந்த நேரம். 2004 ஆம் ஆண்டில் வெளியானது செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த 7/g ரெயின்போ காலனி திரைப்படம். தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடித்த படம். நான், கேசவன், லக்ஷ்மணன், பாண்டியராஜா, ரவி, கோபால்(மச்சான்), விஜி, மாரிசாமி என்று ஒரு கூட்டமா தான் கல்லூரியில இருப்போம். ஆனால் இந்த கூட்டத்தில் எங்க பாத்தாலும் வெளியில சுத்துறது நான், லக்ஷ்மணன், கேசவன், பாண்டி, கோபி, விஜி பெரும்பாலும் இருப்போம். நாங்க எங்க வெளில சுத்துனாலும் தங்குறது எங்க வீடு, லக்ஷ்மணன் வீடு, கேசவன் மற்றும் பாண்டி வீட்ல தங்குவோம். அப்படி தான் ஒரு நாலு லக்ஷ்மணன் எங்க எல்லாரையும் விருதுநகர்ல உள்ள ஒரு அனாதை இல்லத்துல அவன் நண்பன் ராஜ்குமாரோட அம்மா ஒரு வேளை அங்கிருக்கிற ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக இருந்தது. அவங்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உதவிக்காக நாங்க அங்க சென்றோம். எனக்கு தெரிஞ்சு முதல் தடவையா ரவி எங்களோட வந்திருந்தான். சாயுங்காலம் வரை அந்த ஆதரவற்ற இல்லத்தில் இருந்து அங்கே உதவி புரிந்தோம். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் லக்ஷ்மணன் வீட்டிற்கு திரும்பினோம். நாங்கள் அடிக்கடி லக்ஷ்மணன் வீட்டில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு என்றே கீழ்தளத்தில் தங்குவதற்கு என்று ஒரு அறை இருக்கும். இரவு நேரம் நெருங்கும் பொழுது படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்பொழுது தான் 7/G ரெயின்போ காலனி படம் வெளியாகி இருந்தது. ஆனால் விருதுநகரில் எந்த திரையரங்கிலும் படம் திரையிடவில்லை. அருப்புகோட்டை ராணி திரையிரங்குக்கு போகலாம் என்று முடிவு செய்து அனைவரும் கிளம்பினோம். மொத்தம் 7 நபர் மூன்று வண்டிகளில் போனோம். படம் திரையிடபோவதர்க்கு பத்து நிமிடம் முன்பாகவே 30 கிலோமீட்டர் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டோம். ரவி டிக்கெட் எடுப்பதற்கு அனுப்பி வைத்தோம். ரவி அங்கே பாக்ஸ் 7 டிக்கெட் கேட்க, அது இந்த திரையரங்கில் கிடையாது, வேணும்னா deluxe டிக்கெட் போடவான்னு கேட்க சரி என்று சொன்னதும், எங்கள் 7 பேருக்கும் deluxe டிக்கெட் கொடுக்கப்பட்டது. நாங்க திரையரங்கில டிக்கெட் கிழிக்கரவண்ட டிக்கெட் குடுத்ததும், 'சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ரெடிபன்னிகிரோம்னு சொல்லிட்டு இன்னொரு நபரிடம் deluxe டிக்கெட் 7 ரெடி பன்னுப்பனு யாருக்கோ கட்டளையிட்டார்'. எங்களுக்குள் ஒரு கேள்வி deluxe டிக்கெட் எப்படி இருக்குமோனு. எங்கள் என்ன ஓட்டம் மனதில் இருந்து விலகுவதற்குள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். எங்களுக்கு அதிர்ச்சி deluxe இருக்கையை பார்த்ததும். கடைசி வரிசையில் ஆளுக்கொரு supreme நாற்காலி இருந்தது. ஒரு மின்விசிறி கூட கிடையாது. தலைக்குமேலே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்களா என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் அன்று நிறைவேறியது. படம் பார்க்க வந்த பாதி பேர் எங்களை பார்த்து விட்டு சென்றனர். எங்களுக்குள் அடக்க முடியாத சிரிப்பு இப்படி ஏமாந்து விட்டோமே என்று. படம் ஆரம்பமானது....நல்ல படியாக படம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். விருதுநகர் ஊர் எல்லை வரை எந்த பிரச்சனை இன்றி வந்தோம். சரி இனிமேல் மெயின் ரோட்டில் வந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என்று விருதுநகர் தெரு சந்துக்குள் வந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களை மூன்று இடத்தில போலீஸ்காரர்கள் பிடித்து விசாரித்தனர். எங்களை விசாரித்த நேரம் மணி நள்ளிரவு ஒன்று இருக்கும். எங்கே போயிட்டு வரீங்கடனு கேட்டதுக்கு படத்துக்கு போயிட்டு வர்றோம் சார்னு சொல்லிகொண்டிருக்கிருப்ப, போலீஸ்காரர் எங்களுக்கு இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் வெளில சுத்தகூடாதுன்னு அட்வைஸ் பண்ணத கேட்டுட்டு அங்க இருந்து கிளம்பி லக்ஷ்மணன் வீட்டை வந்து அடைந்தோம். பின்ன கொஞ்ச நேரம் நடந்ததை எல்லாம் சிரிச்சு பேசி அப்படியே தூங்குனத மறக்க முடியாது. இப்போதும் deluxe என்கிற வார்த்தையா பார்க்கும் போதே, இல்ல படிக்கும் போதோ அந்த திரையரங்க அனுபவம் மனசுக்குள்ள நிழலாடும்.

No comments: