கடந்த மாதம் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்கு தூத்துக்குடி சென்றிருந்தேன். செவ்வாய் கிழமை இரவு முத்து நகர் ரயிலில் பயணம் செய்தேன். வெள்ளி கிழமை ஒரு கல்யாணத்திற்கும் செல்ல வேண்டி இருந்ததால் குறைந்தது மூன்று நாட்களாவது விடுமுறை எடுத்தாக வேண்டும். சற்று நினைவு கூர்ந்து பார்த்தால், சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாவது இருக்கும் நான் வளர்ந்த ஆலங்குளத்திற்கு சென்று. சரி எப்படியாவது ஆலங்குளம் சென்று விட வேண்டும் என்று ரயில் பயணத்தின் நடுவே திட்டமிட்டு கொண்டேன். புதன் கிழமை விடியல் தோன்றியது. ஏனோ மனதிற்குள் ஒரு சந்தோசம் வட்டமிட்டு கொண்டு இருந்தது தென் தமிழகத்தை பார்க்கையில். முள் நிறைந்த வேலி மரம் அழகாய் தெரிந்தது. ரயில் தூத்துக்குடி சென்றடைந்தது. ஒரு ஆட்டோ பிடித்து நானும் என் நண்பன் கோபாலும் ஹோட்டல் ஆல்வின் சென்றோம். அங்கே சக நண்பர்கள் ஏற்கனவே தங்கி இருந்தனர். பின் அனைவரும் கிளம்பி நண்பரின் கல்யாணத்திற்கு சென்று, எங்கள் வருகையை பந்தியில் பதிவு செய்தோம். கல்யாணம் நன்றாக நடந்து முடிந்தது. பின் நான், மாரிசாமி மற்றும் கோபால் சிவகாசி செல்லும் பேருந்தில் கிளம்பினோம். நானும், மாரிசாமியும் கோவில்பட்டியில் இறங்கினோம். நான் ஆலங்குளம் செல்ல வேண்டும் என்பதற்காக தாமரை பேருந்திற்காக காத்திருந்தேன். அதே பேருந்தில் தான் கல்லூரி நாட்களில் நானும், செந்திலும் காத்திருந்து வெம்பகோட்டையில் இருந்து பயணம் செய்வோம். ஒருவாறாக பேருந்து ஆலங்குளம் வந்தடைந்தது. நான் அடிக்கடி வடை சாப்பிடும் சங்கரேஸ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும், இரண்டு வடையும் சாப்பிட்டேன். ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அங்கு கூடம் மட்டும் குறையவே இல்லை. முன்பு நான் ஆலங்குளத்தில் இருந்த காலத்தில், ஸ்டேஷன்ன்றி பொருள்களை லட்சுமி ஸ்டோர்ஸ்ல வாங்குவேன். அந்த கடை காரர் என்னிடம் நன்றாக பேசுவார். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதே, என்னை அடையாளம் தெரியாது என நினைத்தேன். அவர் சரியாக என்னை கண்டுபிடித்து, தம்பி எப்படி இருக்கிறீங்க ? அப்பா எப்படி இருக்கிறாங்கன்னு கேட்டார். சென்னையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் 'ஏய் எப்படி இருக்க' என்று ஒருமையில் தான் வரவேற்ப்பு இருந்திருக்கும். இங்குள்ள மக்கள் இப்படி பழகி விட்டனர் இதை தவறு என்று எடுக்கவில்லை. சரி நான் தங்கி இருந்த சிமெண்ட் ஆளை குடியிருப்பிற்கு போகலாம் என்று நினைத்து பேருந்திற்காக காத்து கொண்டிருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் ராதா அத்தையை (அவர்களது மகன் பெயர் ராதாகிருஷ்ணன்) எதேச்சையாக பார்த்தேன். நானாக சென்று அவர்களிடம் அறிமுக படுத்திகொண்டேன். ஏனன்றால் அவர்களை பார்த்து ஒரு பத்து வருடமாவது இருக்கும். அவர்கள் என் கன்னத்தை கில்லி விட்டு (பாசத்துடன்) எப்படி செல்வம் இருக்க என்று கேட்டாங்க. ரொம்ப சந்தோசமாக இருந்தது. சரி என்று அவர்களிடம் விடை பெற்று கொண்டேன். நான் ரொம்ப நேரமாக காத்து கிடந்த பேருந்து வந்ததும் வேகமாக சென்றேன். ஆனால் ஒரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால் பேருந்து சிமெண்ட் ஆலை குடியிருப்புக்கு போகாது. நான் சென்று பேருந்து ஓட்டுனரிடம் காரணம் கேட்டால், அவர் சொன்ன பதில் 'அங்க ஏற கூடிய ஒன்று அல்ல ரெண்டு பேருக்கெல்லாம் வண்டி உள்ள போகாது சார்' என்று சொன்னார். நான் அங்கே தங்கியிருந்த காலத்தில் சுமார் நானூறு குடும்பம் இருக்கும். அந்த காலனியை கடக்கும் பொது எங்கும் கல கலப்பாய் இருக்கும். சரி என்று அதே பேருந்தில் பயணம் செய்து ராஜபாளையம் பயணமானேன். போகும் வழியில் பிரமிப்பாய் இருக்கும் சிமெண்ட் ஆலை சிம்னியை பார்க்கும் பொழுது மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அருமையான பயணம். அடுத்த முறை செல்லும் பொழுது கட்டாயம் சிமெண்ட் ஆலை குடியிருப்பிற்கு செல்ல வேண்டும் என்று மனதில் சொல்லி கொண்டே இங்கே எழுதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Muthu, i loved to read this...well said my friend, awesome...you took me virtually to your Alangulam..
Really nice one...
பழைய நினைவுகள் என்றுமே சுகமானது
Post a Comment