Thursday, March 4, 2010

மன அழுத்தம் தான் காரணமோ ?

நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு எனது கிறுக்கள்களை தொடர்கிறேன். கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு நினைவு என்னை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் என்னில் இருந்த ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் கொண்ட ஒருவன், எனக்குள் இப்பொழுது இருக்கிறானா என்று தேடுகிறேன். நான் வேலை தேடிய நாட்களில் தோல்விகளை கண்டு துவளாத மனம், இப்பொழுது ஏன் புது முயற்சிகளை எடுக்க தவிக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் தோல்விகளை தாங்கி கொள்ளும் மனம் என்னிடம் மறைந்து விட்டதா? நடப்பவைகளை நினைவு கூர்ந்தால், எனது எதிர்காலம் !(இந்த ஆச்சர்யகுரிதானா ?). ஒரு வேலை விடா முயற்சி குணத்தை கை விட்டுவிட்டேனா ? எனக்குள் இருக்கும் சுமை தான் காரணமோ ? கேள்விகள் பல இருக்க விடை மட்டும் இன்னும் கிடைக்க பெறவில்லை.

No comments: