கடந்த சில நாட்களாகவே எனக்குள் தனிமையை உணர்கிறேன். நான் பொதுவாக தனிமையை விரும்பும் மன நிலை கொண்டவன். ஆனால் இன்று அந்த தனிமை ஏனோ என்னை வதைக்கிறது. இதற்க்கு காரணம் லோக்ரஞ்சன்(என் அக்காவின் மகன் - 1.5 வயது எங்கள் வீட்டு செல்ல பிள்ளை). இன்று அவர்கள் எல்லாரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பொதுவாக நான் வீடு திரும்பும் நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும். மென்பொருள் துறையில் வேலை செய்பவரின் எழுதப்படாத தலைவிதி. அந்த சமயத்திலும் அவனது ஒரு சின்ன புன்னகை போதும், மரண படுக்கையில் இருப்பவன் கூட மீண்டு எழ தோன்றும். அவனது மழலை உளறல் போதும் ஆயிரம் கவிதைக்கு ஒப்பிடலாம். இன்றும் என்னை சுற்றி என் உடன் பிறந்தோர் மற்றும் என் பெற்றோர் இருக்க.....அந்த வெற்றிடம் மட்டும் நிலையாக இருக்கிறது. அவன் என்னை மாமா என்று எப்பொழுது அழைப்பனோ என்று ஏங்கிய நாட்கள் எத்தனை ? அவனது சின்னஞ்சிறு சேட்டைகள் கூட எனக்கு அழகாய் தான் தோன்றியது. இன்றும் என் அக்கா மற்றும் அத்தானிடம் தொலைபேசியில் பேசும் நடுவே அவனது குரல் கேட்கும் பொழுது மனதினுள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும் மாதிரி ஒரு எண்ணம். நான் காலை பொழுதை அவனது 'லேப்பாப்' (laptop) எனும் மழலை சொல்லை உச்சரிப்பை அழகாய் ரசிப்பேன். நாட்கள் நகர்வதே தெரியாது அவன் என் அருகில் இருக்கையில். லோக்ரஞ்சன் அமெரிக்கா செல்லும் முன்பு 'தம்பி எங்கே போறீங்கனு கேட்டால் ?' அமெரிக்கா என்று சொல்லும் அழகை யார் கேட்டாலும் பரவசம் அடைவர் என்பது உண்மை. 'சரி மாமாவை அமெரிக்கா போன நினைப்பியானு கேட்டால் ?'...நினைப்பேன் என்று அந்த மழலை மொழியில் சொல்லிய சொல்லை என்றும் நான் நினைத்து கொண்டிருப்பேன்........அவர்களின் வருகையை என்றும் எதிர்நோக்கி தனிமையில் நான்.......வாழ்க்கை என்னும் எனது பயணம் தொடர்கிறது.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தாய்க்குப்பின் தாய் மாமன் என்று சும்மாவா சொன்னார்கள்!.
Post a Comment