நான் ஒரு நாள் மதிய வேளையில் தியாகராய நகரில் இருந்து வேளச்சேரி நோக்கி M7 வழி தடம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஓர் 70 வயது மதிக்க தகுந்த முதியவர் எனக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருந்தார். பயணத்தின் நடுவே அவரது அருகில் இருந்தவரிடம் வேளச்சேரி வந்தால் அவருக்கு தெரிவிக்க வேண்டினார். நான் அவர்களின் உரையாடலுக்கு நடுவே புகுந்து, நானும் அங்கு தான் செல்கிறேன், நான் இறங்கையில் அவரிடம் தெரிவிக்கின்றேன் என்று சொன்னதற்கு அவர் எனக்கு நன்றி கூறினார். நாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும், நானும் அவரும் இறங்கினோம். பின்பு அவர் ஒரு முகவரி காட்டி அதன் விலாசம் கேட்டார். நான் செல்லும் வழியில் தான் அந்த விலாசமும் இருந்ததால், நான் அவரை அழைத்து கொண்டு சென்றேன். பாவம் அவரிடம் பொருள்கள் நிறைய இருந்ததால் தூக்க சிரமப்பட்டார். நானும் அவரிடம் இருந்த பொருள்களை சுமந்து கொண்டேன். பின்பு இருவரும் பேசி கொண்டே நடந்தோம். அவரிடம் எதற்காக சென்னை வந்திருகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என் வாழ்வில் ஓர் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவர் வேலை தேடி வந்துள்ளதாக தெரிவித்தார். அவரது வயது 72. பெயர், சத்யநாராயணன், கேரளாவை சேர்ந்தவர். அவர் சொன்ன அறிவுரை, "உனக்குள் இருக்கும் திறமை ஒன்று தான் உனது மூல தனம். உலகம் உன்னை நம்புவதற்கு முன்னாள் முதலில் நீ உன்னை நம்பு. வெற்றிக்காக போராடுவதை விட தோழ்வியை தவிர்ப்பதற்காக போராடு ". நாங்கள் பிரியும் நேரம் வந்தது, அவரிடம் இருந்து விடை பெற்றேன். அவரோடு பயணம் செய்ததோ ஐந்தே நிமிடம் தான், ஆனால் இன்னும் அவர் சொன்ன வார்த்தையை கடந்த இரண்டு ஆண்டாக சுமக்கிறேன். அவர் எனக்கு வயதானவராக எனக்கு தெரியவில்லை. ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன், என் தலை எழுத்தில் அவரை சந்திக்க கட்டளையிட்டதற்கு. நன்றி இறைவா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment