Monday, March 2, 2009

பிரபு பிரசன்னா - இரங்கல் செய்தி

பிரபு பிரசன்னா எனக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர் தான். ஆனால் எங்களுக்குள் இருந்த இணைப்பு நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தது மற்றும் தான். நான் இது வரை பிரபு பிரசன்னாவிடம் பேசியது கிடையாது. ஆனால் அவனது மரணம் ஏதோ மனதிற்குள் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. Feb 27 அன்று இரவு 11:30 மணி அளவில் காரப்பாக்கத்தில் இருந்து அவரது வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்த நேரத்தில் விபத்துக்கு உள்ளானார். தனக்கு ஏற்பட்ட விபத்தை உணர்ந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடி உள்ளார். அங்கிருந்து அவரை அரசு மருத்துவமனை, சென்ட்ரல் செல்ல அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவமனை போகும் வழியிலே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர் கூறி உள்ளனர். அவரது ஆத்மா சாந்தி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.
குறிப்பு: தயவு செய்து இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் பொழுது கவனமாக பயணம் செய்யுங்கள்.

No comments: