இறுதி போட்டி ஆரம்பத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சாதகமாக இருந்தது. கடந்த ஆண்டு சொடுக்கு பாலாஜி இருந்தே கோப்பை கைப்பற்றிய சென்னை அணி இந்த முறை ஜெயித்ததில் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. வழக்கம் போல அஸ்வின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. சுழல் பந்து வீச்சுக்கு எப்போதுமே சென்னை ஆடுகளம் ஒத்துழைக்கக் கூடியதாக இருக்கும். சென்னை அணி இந்த வருடம் ஃபீல்டிங்கில் சிறப்பானதாக இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ட்வெயின் பிராவோ ஃபீல்டிங் செய்யும் பொழுது ஒரு முழு ஈடுபாடு இருக்கும். அது போல தான் மும்பை இண்டியன்ஸின் கெய்ரோன் பொல்லார்ட். நம்ம சென்னை அணி பசங்கட்ட அது இல்லன்னு சொல்ல வரல. ஆனா ஃபோட்டொக்கு போஸ் குடுக்கனும்னு தோனுது. உதாரணத்துக்கு சொல்லனும்னா பத்ரினாத்துக்கு கைல வர பந்த கூட புடிச்சிட்டு ஒரு பல்டி அடிக்கனும்னு தோனுது. அது போல முரளி விஜய்க்கு கிழக்கு நோக்கி வர கேட்ச் மேற்கு நோக்கி கை வைச்சு பிடிச்சா ஆகாதுன்னு எந்த ஜோசியக்காரன் சொன்னான்(ர்) தெரியல. வடக்கு அல்ல தெற்கு நோக்கி கை வைச்சு பிடித்தால் தான் அனுகூலம்னு சொல்லிருக்கக்கூடும்னு நினைக்கிறேன். இந்த வருடம் ஒரு பெரிய அதிசயம் ஜகாடி ஃபீல்டிங்கில் கடந்த ஆண்டை விட மிக சிறப்பாக செய்தது. ஐ.பி.எல் ஐ விளம்பரப் படுத்த, ஒ இட்ஸ் பீன் எ காமெடி ஆஃப் எர்ரர்ஸ் நு தன்னை கிண்டலடிச்ச ஹர்ஸா போக்லேவை தன்னுடைய மோதிரக் கையால் கொட்டினாலும் தப்பில்லை. பேட்டிங்கில் ஹஸ்ஸி ஆரம்பத்தில் இருந்தே கலக்கினார். முரளி விஜய் கடைசி போட்டியில் கை கொடுத்தார். மற்றபடி பேட்டிங்கில், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனின் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க முடிந்தது. ஆல்பி மார்க்கல்லின் அதிரடியான பேட்டிங் அறுமையாக இருந்தது. ரெய்னா, தோனி, பத்ரினாத், சகா, பிராவோ வெற்றிக்கு உதவினர். பொலிஞ்சர் பந்து வீச்சு நன்றாக இருந்தது. வெற்றிக் களிப்பில் பொலிஞ்சர் மற்றும் பிராவோவின் ஆட்டம் சூப்பர். அதிலும் பிராவோ குத்துப்பாட்டுக்கு போட்ட ஆட்டம் ஏதோ நம்ம ஊர் பையன் சாவுமேளத்துக்கு ஆட்டம் போட்ட மாதிரி இருந்தது. இன்னொரு விஷயம், தோனி மட்டும் கூல் கிடையாது, உண்மையில சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர், குருநாத் மெய்யப்பனும் கூல் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment