சென்னை சென்றவுடன் வேலை கிடைத்து விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இங்கே வந்து இறங்கி ஏமாந்து போனோம். நான், கேசவன் மற்றும் விநாயகமூர்த்தி மூவரும் மதுரையில் இருந்து சென்னை வந்தோம். முதல் முதலாக தாம்பரத்தை அடுத்து உள்ள பழைய பெருங்களதூரில் தங்கி இருந்தோம். அடுத்ததாக விஜயநகரில் வெங்கடேஸ்வர நகரில் சிறிது காலம் தங்கி இருந்தோம். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவர்கள் என் அப்பா மற்றும் அம்மா. தொடர்ந்து வேலை தேடி கொண்டிருக்கையில் நாட்களும் நகர்ந்தன. அங்கிருந்து பின்பு வேளச்சேரி TNHB காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். நான், கேசவன், விநாயகமூர்த்தி, மாரிசாமி மற்றும் பாண்டி தங்கினோம். ஒரு சமயம் வீட்டில் தங்கி இருந்தவர்கள் எண்ணிக்கை 13 ஐ தொட்டது. சில நேரம் ஒருவன் கால் மற்றவனுக்கு தலையனையாகவும் இருக்கும். தங்கி இருந்த அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் எங்கள் சம்பளத்தை எதிர்நோக்கி எங்கள் குடும்பம் காத்திருந்தன. வேலை இல்லை என்கிற கவலையை தவிர எல்லா நேரமும் எங்களுக்குள் சந்தோசம் புரையோடி கொண்டிருக்கும். எந்த நேரமும் கிண்டலும் கேலியும் இருக்கும். அடுத்ததாக எங்கள் வாடகை வீட்டிற்கு வந்தவன் கோபால்சாமி. அடுத்ததாக வந்தவன் நோயல். அடுத்து ரிச்சர்ட், ஹுசைன் (சதீஷ்), ரவீந்திரன். இதுல கொஞ்சம் நேரம் படிப்போம், நிறைய நேரம் பேசி சந்தோசமா இருப்போம். எங்களுக்கு அந்த வீடு ஒரு உள்விளையாட்டு அரங்கம் கூட. உள்ளேயே கிரிக்கெட் விளையாடுவோம். நல்லா அந்த ஹால்ல படுக்கனும்ன மூன்று நபர்கள் படுக்கலாம். ஆனா அந்த ஹால்ல கூட 3 பேரு பீல்டிங் நிப்போம். ராத்திரி வரை சீட்டு விளையாட்டு. சமைக்க காஸ் சிலிண்டர் வீட்டு சொந்தக்காரரே குடுத்ததால, மூணு வேலை சமையல் நடக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைல சமைக்கணும். இதுல பாண்டி சமைக்கணும்னு சொல்லிச்சுன்ன கடைக்கு போயி ரவை வாங்கி வந்து கிண்டி வைப்பான் உப்பு போடாம....காலை வேலைல உப்புமாவ உப்பு இல்லாம சாப்பிட்ட எப்படி இருக்கும். அவனிடம் கேட்டா தெரியாம செஞ்ச தப்புன்னு சொல்லுவான். சில நேரம் பஞ்சாயத்து நடக்கும். செலவு கணக்கு எல்லாம் விநாயகமூர்த்தி பாத்துக்குவான். நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தும் குழம்ப கடைசி வரைக்கும் கட்டிய வச்சு சாபிடதே இல்லை. சாதத்துல நாங்க வச்ச குழம்ப ஊத்தி சாப்பிட்டா ரெண்டும் ஒட்டவே ஒட்டாது. அப்படி இருந்தாலும், ஒரு பெரிய பாத்திரத்தில செய்ற சாப்பாடு கடைசில சாபிடுவனோட நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இருக்கிற சாப்பட்ட நிரந்து சாப்பிடுவோம். என்ன குழம்பு வச்சாலும் கடைசில மல்லி இழை போட்டு முடிச்சு வைப்போம். ஊறுகாய் தான் தினசரி தொட்டுக்கிரதுக்கு இருக்கும். இது பரவாயில்லை காலைல சம்பா ரவை உப்புமா சாப்பிட்டு நாக்கு செத்து போன காலம் மறக்கவே முடியாது. சென்னைல வேலை கிடைச்சும் உப்புமாக்கு பயந்து ME படிக்க போனவன் எல்லாம் உண்டு. நாயர் கடைல டீ, சலூன் கடைல டிவி, அரட்டை அடிக்க மளிகை கடை சரவணன். சாயுங்காலம் வெளில கிரிக்கெட். வாய் பேசறதுக்கு முன்னாடி வீட்டு சொந்தக்காரரோட பையன எல்லாம் அடிச்சது நினைவுக்கு இருக்குது. யாருக்காவது உடம்பு சரியில்லைனா, மத்தவங்களுக்கு எல்லாம் மஜா தான். ஒரு தடவை மாரிசாமிக்கு தூங்கி கிட்டுரிக்கிற சமையத்துல நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதுக்கு, தூங்கி கிட்டிருக்க எல்லாரும் எந்திரிச்சு சிரிச்சத மறக்கவே முடியாது. யாரவது interview க்கு போனா போதும், அவன் திரும்ப வரும் பொழுது அவன சுத்தி ஆடுரதுக்குனு ஒரு கூட்டம் இருக்கும். ஒவ்வொருத்தரோட போர்வையை முகர்ந்து பார்த்தா அந்த மயக்கதுலையே தூங்கிறலாம். நாங்க பௌடர மூஞ்சில அடிச்சத விட அடுத்தவன் அக்குள்ள போட்டது தான் அதிகமா இருக்கும். எப்பவாவது எங்க எதிர் வீட்டு அக்கா அவங்க வீட்டில செஞ்ச சாப்பாட குடுப்பாங்க. அதில எல்லாரும் போட்டி போட்டு பறிச்சு சாப்பிடுவோம், அந்த கூட்டதில எனக்கு கொஞ்சம்னு கை நீட்டிற ஒரே ஜீவராசி கோபால்சாமி மட்டுமே. இன்னும் நிறையா எழுதிட்டே போகலாம். வேலை தேடிய அந்த நாட்கள்ல எல்லோரும் நல்லா மனம் விட்டு பேசுவோம். இப்ப எல்லாம் பேசுறதே குறைஞ்சு போச்சு. ஆனால் எல்லாரோட மனசுலயும் நினைவுகள் இருக்கும்னு நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment